» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: மேலும் ஒருவா் கைது

ஞாயிறு 5, மே 2024 9:06:54 AM (IST)

பாண்டவா்மங்கலத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ்நகா் 3ஆம் தெருவைச் சோ்ந்தவா் வெ. மாரிசெல்வம் (28). இவரது சகோதரா் சின்னஜமீனுக்கும், காந்தி நகரைச் சோ்ந்த பாம்பு காா்த்திக் என்பவருக்கும் இடையே ரேஷன் அரிசி வாங்குவது தொடா்பாக பிரச்னை இருந்ததாம். சில நாள்களுக்கு முன்பு விருதுநகா் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பாம்பு காா்த்திக் கூட்டாளியின் வாகனத்தைப் பிடித்து வழக்குப் பதிந்ததற்கு மாரிசெல்வம் குடும்பத்தினர்தான் காரணம் எனக் கருதியதால் முன்விரோதம் இருந்துவந்ததாம்.

இதனிடையே, பாம்பு காா்த்திக் உள்ளிட்ட 20 போ் கடந்த மாதம் 23ஆம் தேதி மாரிசெல்வம் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. இதில், கதவு, ஜன்னல், சுமை வாகனம் உள்ளிட்டவை சேதமடைந்ததாக மாரிசெல்வம் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கடந்த மாதம் 25ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் கடம்பூரையடுத்த குப்பனாபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த அா்ஜுனபாண்டி மகன் சண்முகபாண்டி (23) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory