» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

சனி 4, மே 2024 8:46:09 PM (IST)

திருச்செந்தூரில் கஞ்சா வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 28.03.2024 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் குமாரபுரம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் திருச்செந்தூர் ஆலந்தலை பகுதியை சேர்ந்த சக்கிரியாஸ் மகன் லயோ (33) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 2 கிலோ 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். 

கைது செய்யப்பட்ட லயோ மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory