» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி 14வது வார்டு பகுதியில் சாலை, கழிவு நீர் வடிகால் அமைக்க கோரிக்கை!

சனி 4, மே 2024 5:19:20 PM (IST)



தூத்துக்குடி 14வது வார்டு கழிவு நீர் வடிகால், சாலைப் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சி 14 வது வார்டு செல்வ விநாயகர் தெருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தெருக்களில் உள்ள பள்ள மேடுகள் சீராக்க பட்டு வீடுகளின் படிகள் இடிக்கப்பட்டு, கழிவு நீர் உறைகிணறுகள் உடைக்கப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

அதன் பின்னர் தற்பொழுது வரை வேறு எந்த பணியும் நடைபெறவில்லை அதனால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி பொதுமக்கள் தெருவில் பயணிக்க ரொம்ப சிரமப்படுகிறார்கள். எனவே, சாலைகள், மழைநீர் கால்வாய், கழிவுநீர் வடிகால் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

இயற்கைமே 8, 2024 - 06:41:30 AM | Posted IP 172.7*****

நீர்நிலைகளை ஆக்கிமிரத்தால் இப்படித்தான்

SIVAGAMINATHAN M திருநெல்வேலிமே 6, 2024 - 11:29:00 AM | Posted IP 172.7*****

இது போல் தூத்துக்குடி மில்லர்புரம் பாரதிநகர் 5 ஆம் தெருவிலும் வேலையை ஆரம்பித்து விட்டு பாதியில் நிற்கின்றது இதனால் வீட்ல உள்ளவர்கள் துர்நாற்றம் சுவாசக்கோளாறு கொசுக்கடி மற்றும் வீட்டின் பாதுகாப்பு இவற்றினால் அவதியுற்று கொண்டிருக்கிறார்கள் இந்த இன்னல்களை விரைவில் போர்கால நடவடிக்கை எடுத்து தீர்க்கும்படி தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்கின்றோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory