» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெயிலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு!

சனி 4, மே 2024 9:00:45 AM (IST)



வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்க தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு தொடங்கப்பட்டுள்ளது. 

அக்னி நட்சத்திரம் இன்று (மே 4) தொடங்குவதையடுத்து வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வாா்டு தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா் தெரிவித்தாா்.

வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு ‘ஹீட் ஸ்ட்ரோக்’, மயக்கம் ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக அவசர சிகிச்சைப் பிரிவு அருகே 6 படுக்கைகள் கொண்ட குளிரூட்டப்பட்ட தனி வாா்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாா்டில் சிகிச்சைக்கான அனைத்தும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் தெரிவித்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory