» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் எரிப்பு: சிறுவன் உட்பட 2பேர் கைது!

புதன் 1, மே 2024 10:42:08 AM (IST)

தூத்துக்குடியில் பணத் தகராறில் வீடு புகுந்து பைக்கை எரித்த 17 வயது சிறுவன் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜா (எ) அந்தோணி மகன் மோஹித் (20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜவஹர் மகன் ஆகாஷ் (20) என்பவரிடம் ரூ.2500 கடன் வாங்கினாராம். அதனை திருப்பி கொடுக்காதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று பணத்தை கேட்டு ஆகாஷ் மற்றும் அவரது நண்பரான 17 வயது சிறுவன் ஆகியோர் மோஹித் வீட்டிற்கு சென்று அவரது அம்மா சாந்தியிடம் தகராறு செய்தார்களாம். மேலும் வீட்டின் முன் நிறுத்தியிருந்த ரூ.1லட்சம் மதிப்புள்ள புல்லட் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டார்களாம். 

இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் சாந்தி புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து ஆகாஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory