» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பீரோவில் வைத்திருந்த ரூ.6லட்சம் நகை திருட்டு - போலீஸ் விசாரணை!!

புதன் 1, மே 2024 10:34:47 AM (IST)

நாசரேத்தில் பீரோவில் வைத்திருந்த ரூ.6லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பிரகாச புரத்தைச் சேர்ந்தவர் மோகன் மனைவி ஷைலா (44). இவர்களது வீட்டில் கடந்த 29ம் தேதி ஷைலாவின் அண்ணன் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. விழா முடிந்த பின்னர் பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 14.5 பவுன் நகைகள் திருடு போய்விட்டதாம். இதன் மதிப்பு ரூ.6லட்சம் ஆகும். இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜீன் குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory