» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளத்தில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் இயக்கிட பொதுமக்கள் கோரிக்கை!

புதன் 1, மே 2024 9:54:23 AM (IST)

சாத்தான்குளத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இருந்து பேய்க்குளம், முனைஞ்சிப்பட்டி, மூலைக்கரைப்பட்டி, நெல்லை வழியாக மதுரைக்கு அரசு பஸ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் மதியம் 1மணிக்கு புறப்பட்டு மாலையில் மதுரை சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. இதன்மூலம் இங்குள்ளவர்கள் மதுரை சென்று பிற ஊர்களுக்கு செல்லும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த பஸ் திடீரென எந்த அறிவிப்பும் இன்றி நிறுத்தம் செய்யப்பட்டது.

இதனை போல் மதுரையில் இருந்து இரவு 1மணி அளவில் புறப்பட்டு நெல்லை, சாத்தான்குளம், வழியாக குலசேகரன்பட்டினம் சென்ற அரசு பேருந்தும் திடீரென நிறுத்தம் செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்படாமல் உள்ளது. தற்போது மதுரை பகுதிகளுக்கு செல்ல சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகளுக்கு சென்றுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆதலால் போக்குவரத்துதுறை அதிகாரிகள் பரிசீலனை நடத்தி சாத்தான்குளத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory