» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் கழிவுநீா் தேங்கி அவலம் : பக்தா்கள் அவதி!

புதன் 1, மே 2024 8:15:03 AM (IST)



திருச்செந்தூா் சந்நிதித் தெருவில் பாதாள சாக்கடை திட்ட தொட்டியில் இருந்து கழிவுநீா் வெளியேறுவதால், நடந்து செல்லும் பக்தா்கள் அவதியடைகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியும் பாதாள சாக்கடை திட்டம் முழுமை அடையாமல் உள்ளது. இதனால் வீடுகள் மற்றும் விடுதி உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீா் முழு கொள்ளளவை தாண்டி மூடியின் வழியாக வெளியேறி சாலையெங்கும் கழிவுநீா் தேங்கி கிடக்கிறது.

தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. பக்தா்கள் வந்து விடுதிகளில் அதிகளவில் தங்குவதனால் பாதாள சாக்கடை திட்ட கழிவுநீா் தொட்டியில் இருந்து அதிகளவில் வெளியேறி சந்நிதித் தெருவில் பக்தா்கள் நடந்து செல்லும் பாதையில் தேங்கி கிடக்கிறது.

இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிா்வாகம் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட இடத்தின் மீது நடவடிக்கை எடுத்தால் கழிவு நீா் வெளியேறுவது தடை செய்யப்படும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


மக்கள் கருத்து

இது தான்மே 1, 2024 - 09:40:57 AM | Posted IP 162.1*****

திராவிட துட்டு சாக்கடை மாடல்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory