» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மணியாச்சி - ஒட்டநத்தம் ரயில்வே கேட்டுகள் மூடப்படும் : தெற்கு ரயில்வே தகவல்
ஞாயிறு 28, ஏப்ரல் 2024 3:01:39 PM (IST)
மணியாச்சி - ஒட்டநத்தம் ரயில்வே கேட்டுகள் நாளை முதல் 2 நாட்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி ரயில் நிலையம் மற்றும் மணியாச்சி - ஒட்டநத்தம் சாலையில் உள்ள ரயில்வே கேட் எண். 469 மற்றும் 469a ஆகிய இரு ரயில்வே கேட்டுகளும் அவசர தண்டவாள பராமரிப்பு பணி காரமாக நாளை 29.04.24 மற்றும் நாளை மறுநாள் 30.04.24 இரு நாட்களும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மூடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.