» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மருமகளை துன்புறுத்திய மாமியாருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: நீதிமன்றம் தீர்ப்பு

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 9:02:05 AM (IST)

சாத்தான்குளம் அருகே மருமகளை துன்புறுத்தியதாக மாமியாருக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராத விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலசேரியை சேர்ந்தவர் துரைராஜ் மகன் ஏசு ராஜா இவருக்கு பேய்க்குளம் குருகால் பேரியைச்சேர்ந்த ஷாலினி என்பவரும் காதல் திருமணம செய்தனர். தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன இதற்கிடையில் ஏசு ராஜா, அவரது தாயார் பாத்திமா, சகோதரிகள் மேரி புஷ்பம், ஜெய புஷ்பம் ஆகியுடன் சேர்ந்து மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார் 

மேலும் தாயார் ஷாலினியை மிகவும் அசிங்கமாக ஏசி வீட்டை விட்டு வெளியே போக வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து ஷாலினி சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கலையரசி ரீனா, ஷாலினியின் மாமியாருக்கும், அவரது மகள்களுக்கும் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்றும் ஏசு ராஜா 7000 ரூபாய் மாதந்தோறும் மனைவிக்கு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory