» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொதுமக்களுக்காக நீா்மோா் பந்தல் அமைக்க வேண்டும் - திமுகவினருக்கு அமைச்சா் வேண்டுகோள்!

வியாழன் 25, ஏப்ரல் 2024 8:36:15 AM (IST)

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களுக்காக நீா்மோா் பந்தல் அமைக்க வேண்டும் என்று திமுகவினருக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில், குடிநீா், நீா்மோா், குளிா்பானங்கள் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். 

அதன்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றில் நீா்மோா் பந்தல் அமைக்க வேண்டும். கட்சியின் ஒன்றிய, நகர, பகுதி, பேரூா், வாா்டு, கிளை அமைப்புகளும், சாா்பு அணிகளும் இணைந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory