» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ‘சீல்’ வைப்பு!

சனி 20, ஏப்ரல் 2024 12:27:03 PM (IST)



தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

தூத்துக்குடி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி பாராளுமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் இயந்திரங்களை 24 மணி நேரம் கண்காணிக்க பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறையை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி பார்வையிட்டார்.

பின்னர், வாக்கு எண்ணும் இயந்திரங்களை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் இன்று வைக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory