» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 2பேருக்கு அரிவாள் வெட்டு: 4பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!!
சனி 20, ஏப்ரல் 2024 10:58:43 AM (IST)
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக விற்பனை செய்த வாலிபர் உட்பட 2பேரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் 4பேரை போலீசார் தேடி வருகின்றனனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகில் உள்ள முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்தவர் செந்தில்வேல் மகன் பிரேம்குமார் (19). இவர் நேற்று பொட்டல்காடு அருகில் ஒரு டீக்கடை முன்பு மதுபானம் விற்பனை செய்தாராம். அப்போது அங்கு வந்த 4வாலிபர்கள் பிரேம்குமாரிடம் மதுபானம் கேட்டார்களாம். அவர் கூடுதல் விலை சொன்னதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த 4பேர் கும்பல் பிரேம்குமாரை சர மாறியாக அரிவாளால் வெட்டினார்களாம்.
இதை தடுக்க முயன்ற டீக்கடை நடத்தி வரும் முள்ளக்காடு காந்தி ஐஸ் பேட்டரி ரோட்டைச் சேர்ந்த ராமஜெயம் மகன் வேல்ராஜ் 45 என்பவரையும் அறிவாளால் வெட்டி அவரது கடையில் இருந்த அனைத்து பொருட்களையும் சூறையாடினார்களாம். இதில் படுகாயம் அடைந்த பிரேம்குமார், வேல்ராஜ் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அந்த 4 பேர் கும்பலை தேடி வருகிறார்.