» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தொகுதியில் 59.66% வாக்குப்பதிவு : நள்ளிரவில் மாற்றிய தேர்தல் ஆணையம்!
சனி 20, ஏப்ரல் 2024 10:53:04 AM (IST)
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 59.66% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, அமைதியான முறையில் நடந்து முடிந்தது. சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுதடைந்ததாக புகார் எழுந்தது; அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன. சலசலப்புகள், வாக்குவாதங்கள் தவிர்த்து அசம்பாவிதம் ஏதுமின்றி தேர்தல் நடந்து முடிந்தது.
தூத்துக்குடி தொகுதியில் இரவு 8 மணி வரை 70 சதவீத வாக்கு பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் நள்ளிரவில் அதனை மாற்றி,59.66% சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவானதாக அறிவித்துள்ளது. விளவங்கோடு இடைத்தேர்தலில் 65.40% ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.