» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாக்குச்சாவடி மையங்கள் கண்காணிப்பு அறையில் ஆட்சியர் ஆய்வு!
வெள்ளி 19, ஏப்ரல் 2024 12:20:28 PM (IST)
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவினை கட்டுப்பாட்டு அறையிலிருந்து தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதி ஆய்வு மேற்கொண்டார்.
பாராளுமன்ற பொது தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி கண்காணிப்பு பணியினை மேற்கொண்டார். உடன் வாக்காளர் பதிவு அலுவலர் / தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உடனிருந்தார்.