» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இனிகோ நகர் கடற்கரையில் மர்மமாக இறந்து கிடந்தவர் யார்? போலீஸ் விசாரனை

வெள்ளி 29, மார்ச் 2024 4:48:08 PM (IST)

தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது கொலையா? தற்கொலையா-? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடப்பதை கண்ட அந்த பகுதி நாட்டு படகு மீனவர்கள் உடனடியாக தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடந்த அந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இறந்தது யார்? எந்த பகுதியை சார்ந்தவர்? என்பது குறித்தும், அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அதைபோல் சமீப நாட்களாக கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, கஞ்சா, மாத்திரைகள், போன்ற பொருட்கள் கடல் வழியாக கடத்தப்பட்டு வருகின்றது. ஒரு வேலை அந்த விசயத்தில் ஏதேனும் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மீனவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory