» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாய்க்கால் அருகில் தோண்டப்பட்ட ராட்சத குழியை மூட கோரிக்கை!
திங்கள் 20, நவம்பர் 2023 3:13:43 PM (IST)
துப்பாஸ்பட்டி கன்மாய்க்கு தண்ணீர் வரும் வாய்க்கால் அருகில் தோண்டப்பட்ட ராட்சத குழாயை மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆ. கீழஅரசடி முன்னாள் ஊராட்சி தலைவர் ஜேசுதாசன் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், கீழ அரசடி ஊராட்சி துப்பாஸ்பட்டி கன்மாய்க்கு வரும் கால்வாயை தூர்வாரியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி. மேற்படி கன்மாய்க்கு அருகில் ஊராட்சி நிர்வாகம் இராட்சச 100 அடி குழி தோண்டி மணல் எடுத்துவிட்டார்கள்.
கன்மாய்க்கு தண்ணீர் வரும் வாய்க்கால்அருகில் தோண்டியதால் கன்மாயில் உள்ள குடிநீர் எடுக்கும் கிணற்றிற்கு அருகில் தண்ணீர் வர வில்லை. கிணற்று அருகில் தடுப்பு சுவர் கட்டுகிறார்கள் ஊராட்சி தலைவர் மதன் இந்த கான்ட்ராக்ட்டை எடுத்து செய்து வருகின்றார். வட்டார வளர்ச்சி அலுவலர். ஒன்றிய பொறியாளர் ஆகியோர் பார்வையிட்டு இனி வரும் மழைக் காலங்களிலாவது வரும் தண்ணீரை சேமித்து வைக்க தோண்டப்பட்ட இராட்சச குழியை மூட போர்க்கால அடிப்படையில் நடவெடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!
சனி 19, ஏப்ரல் 2025 11:15:44 AM (IST)

தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு
சனி 19, ஏப்ரல் 2025 10:45:40 AM (IST)

தூத்துக்குடியில் மீன்களில் விலை கடும் உயர்வு: மீன்வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்!
சனி 19, ஏப்ரல் 2025 10:17:55 AM (IST)

அம்மிக் குழவியால் தாக்கி வாலிபர் கொடூரகொலை : மாமனார் உட்பட 2பேர் கைது!
சனி 19, ஏப்ரல் 2025 10:07:16 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்
சனி 19, ஏப்ரல் 2025 8:55:53 AM (IST)

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)
