» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இடப்பிரச்னையில் மோதல்: ஆசிரியர் உள்ளிட்ட 4பேர் மீது வழக்கு

புதன் 28, ஜூலை 2021 10:24:21 AM (IST)

சாத்தான்குளம்  அருகே இடப்பிரச்னையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆசிரியர் உள்ளிட்ட 4பேர்  மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் அற்புதகனகராஜ் (56). ஆசிரியரான இவர் பொதுபாதையை தனக்கு சொந்தமானது என அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் அதே ஊரைச் சேர்ந்த ஜெகன் (52) , அவரது மனைவி நிர்மலா (45) ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்ததில் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. 

இதில் இருத்தரப்பினரும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாக  கூறப்படுகிறது. இதுகுறித்து அற்புதகனகராஜ், நிர்மலா ஆகியோர் தனித்தனியாக சாத்தான்குளம்  காவல் நிலையத்தில்  புகார் செய்தனர்.  நிர்மலா புகாரின் பேரில் அற்புத கனகராஜ், அவரது மனைவி அமலஜோதிலிட்வின் ஆகியோர் மீதும், அற்புத கனகராஜ்  புகாரின் பேரில் ஜெகன், அவரது மனைவி  நிர்மலா ஆகியோர்  மீதும்  உதவி ஆய்வாளர்  ஜாண்சன் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory