» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவை அவமதிக்கும் சமூக ஊடக பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூர் அரசு நடவடிக்கை
ஞாயிறு 7, ஜூன் 2026 11:20:56 AM (IST)
இந்திய சமூகத்தை குறிவைப்பதோடு, நாட்டின் பன்முக கலாசார அமைதியை சீர்குலைக்கும் வகையிலான 14 சமூக ஊடகப் பதிவுகளை முடக்குமாறு சிங்கப்பூர் அரசு உத்தரவிடுகிறது.
யூடியூப், பேஸ்புக் மற்றும் எக்ஸ் வலைத்தளங்களில் இந்த பதிவுகளை முடக்குமாறு ஆன்லைன் குற்றவியல் தீங்குகள் சட்டத்தின் கீழ் காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. சிங்கப்பூர் பயனர்கள் இந்தப் பதிவுகளை அணுகுவதைத் தடுப்பதற்கான ‘‘அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும்’’ அந்தத் தளங்கள் மேற்கொள்ள வேண்டும் சிங்கப்பூர் நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘இந்தப் பதிவுகளில் உள்ள சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவை சீனாவைச் சேர்ந்த ஒரு தளத்தில் உருவானதாகவும், பின்னர் பிற தளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் பகிரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோக்கள் நமது பல்வகை சமூகத்தைத் தாக்குவதோடு, இன அடிப்படையில் மக்களைப் பிரிக்கவும் முயற்சிக்கின்றன. இங்கு அனைவருக்கும் சமமான இடம் உள்ளது. எனவே அந்த பதிவுகள் முடக்கப்படுகின்றன” என்று மந்திரி எட்வின் டோங் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் பலி!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:42:28 PM (IST)

அமெரிக்கா - இத்தாலி தலைவர்கள் இடையே மோதல் முற்றியது: டிரம்ப் பேச்சுக்கு மெலோனி பதிலடி!
திங்கள் 22, ஜூன் 2026 11:00:35 AM (IST)

ஈரானில் பிரபல பாடகிக்கு 74 சவுக்கடிகள் தண்டனை : மனித உரிமை அமைப்புகள் கண்டனம்!
சனி 20, ஜூன் 2026 5:37:38 PM (IST)

ஒப்பந்தத்தை மீறினால் குண்டுவீச்சு நடத்துவோம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 4:32:35 PM (IST)

இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் தான் நிற்கும் : உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி!
வியாழன் 18, ஜூன் 2026 11:18:03 AM (IST)

உலக அளவில் நிம்மதி: அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்! எண்ணெய் விநியோகம் சீராகும்!
திங்கள் 15, ஜூன் 2026 3:52:24 PM (IST)








