» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் மக்கள் கொந்தளிப்புஎதிரொலி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80 குறைப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 5:10:06 PM (IST)
எரிபொருள் விலை உயர்வால் மக்கள் மத்தியில் எழுந்த கடும் கொந்தளிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பை அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று நள்ளிரவு வெளியிட்டார்.
மத்திய கிழக்கு நாடுகளில் (அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான்) நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்த்தியது.இந்த அதிரடி உயர்வால், பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.458.41-க்கும், டீசல் ரூ.520.35-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் சுமார் 43% முதல் 55% வரை விலை உயர்ந்ததால், மக்கள் சாலைகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் போராட்டத்தை அடுத்து, நேற்று நள்ளிரவு நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது: "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ள போதிலும், மக்களின் பாரத்தைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான வரியைக் குறைப்பதன் மூலம் லிட்டருக்கு 80 ரூபாய் குறைக்கப்படுகிறது. இனி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.378-க்கு விற்பனை செய்யப்படும். இந்த விலைக்குறைப்பு அடுத்த ஒரு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்."மேலும், போர்ச் சூழல் சீரடைந்தவுடன் எரிபொருள் விலைகள் பழைய நிலைக்குத் திரும்பும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இலவசப் பேருந்து பயணம் - மானியங்கள்:
விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சில முக்கிய அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டுள்ளது: தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் அரசுப் பேருந்துகளில் அடுத்த ஒரு மாதத்திற்கு மக்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் ஆரஞ்சு லைன் மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ பேருந்துகளிலும் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு லிட்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், ரயில்வே கட்டணங்களில் இதுவரை எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. அரசின் இந்த உடனடி நடவடிக்கைகள் பாகிஸ்தான் மக்களிடையே ஓரளவிற்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உடன்பாடு எட்டப்படாவிட்டால் இதுவரை கண்டிராத தாக்குதல்: ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை!
வியாழன் 9, ஏப்ரல் 2026 12:48:45 PM (IST)

அமெரிக்காவுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றி: ஈரான் அரசு அறிக்கை!
புதன் 8, ஏப்ரல் 2026 10:19:15 AM (IST)

இருவார போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு: ஈரான் ஒப்புதல் - ஹார்முஸ் நீரிணை திறக்க முடிவு!
புதன் 8, ஏப்ரல் 2026 10:17:54 AM (IST)

தற்காலிக போர்நிறுத்த நடவடிக்கைக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது: ஈரான் திட்டவட்டம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:34:47 PM (IST)

ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும்: டிரம்ப் மிரட்டல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:26:59 AM (IST)

அமெரிக்க தாக்குதலில் ஈரானின் மிக உயரமான பாலம் அழிவு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:51:00 PM (IST)







