» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவை அதிரவைத்த வடகொரியா: 15,000 கி.மீ தொலைவு பாயும் ஏவுகணை சோதனை வெற்றி!

திங்கள் 30, மார்ச் 2026 9:26:02 AM (IST)



உலக நாடுகளின் எதிர்ப்பையும், பொருளாதாரத் தடைகளையும் மீறி வடகொரியா தனது ராணுவ வலிமையை நிரூபிக்கும் வகையில் அதிநவீன ஏவுகணை என்ஜின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

வடகொரியாவிலிருந்து சுமார் 15,000 கி.மீ தொலைவில் உள்ள அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பியக் கூட்டாளி நாடுகளைத் தாக்கும் திறன் கொண்டது. கார்பன் நார் கலவை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த என்ஜின், திட எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. இது திரவ எரிபொருளை விட மிக வேகமாக ஏவப்படக்கூடியது.

கடந்த செப்டம்பரில் 1,970 கிலோ டன்னாக இருந்த உந்துவிசை, தற்போது 2,500 கிலோ டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் வான் பாதுகாப்பு ரேடார்களில் சிக்காமல், ஒலியின் வேகத்தில் சென்று தாக்கும் வகையில் இந்த என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் தரைநிலை ஜெட் சோதனை (Ground Jet Test) மிகப்பெரிய வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், வடகொரியாவின் இந்த அதிரடி நடவடிக்கை உலக நாடுகளிடையே பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory