» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா குறித்து முகமது யூனுஸின் சர்ச்சை பேச்சு: பிரியாவிடை உரையில் பரபரப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:30:15 PM (IST)
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பதவியில் இருந்து விடைபெறும் வேளையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டு முகமது யூனுஸ் பேசியிருப்பது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, அவர் நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். தற்போது நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி (BNP) தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், முகமது யூனுஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.தனது 18 மாத கால ஆட்சி குறித்து ஆற்றிய பிரியாவிடை உரையில் முகமது யூனுஸ் குறிப்பிட்டதாவது: வெளியுறவுக் கொள்கை: "எனது பதவிக்காலத்தில் வங்கதேச வெளியுறவுக் கொள்கையில் இறையாண்மை மற்றும் கண்ணியத்தை மீட்டுள்ளேன். நாடு எந்த ஒரு வெளிநாட்டிற்கும் அடிபணியவில்லை. பிற நாடுகளின் உத்தரவுப்படி நமது அரசு செயல்படவில்லை."
பொருளாதார மண்டலம்: "நமது கடல் பகுதி என்பது வெறும் புவியியல் எல்லை மட்டுமல்ல; அது உலக நாடுகளுடன் இணைவதற்கான ஒரு நுழைவு வாயில். நேபாளம், பூட்டான் மற்றும் இந்தியாவின் ஏழு சகோதரி மாநிலங்களை (வடகிழக்கு மாநிலங்கள்) உள்ளடக்கிய இந்த பிராந்தியம் மிகப்பெரிய பொருளாதார ஆற்றலைக் கொண்டுள்ளது."
இந்த உரையில் இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளான அசாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களை, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இணையாக முகமது யூனுஸ் பட்டியலிட்டுள்ளார்.
இது இந்தியாவின் உள்நாட்டு ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குவது போல் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தனது பதவிக்காலம் முழுவதும் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்ததாக அவர் மீது ஏற்கனவே விமர்சனங்கள் உள்ள நிலையில், இந்த இறுதி உரை மேலும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: இந்திய துறைமுகம் பயன்படுத்தப்பட்டதா? மத்திய அரசு விளக்கம்!
வியாழன் 5, மார்ச் 2026 11:08:13 AM (IST)

மிக நீண்ட போருக்கு ஈரான் தயார்: மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற டிரம்ப் அழைப்பு!
புதன் 4, மார்ச் 2026 5:14:56 PM (IST)

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடித் தொடர்கிறது : டிரம்ப் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 5:19:47 PM (IST)

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: தமிழக மாணவி உட்பட 4 பேர் பலி - கொலையாளி சுட்டுக்கொலை!
செவ்வாய் 3, மார்ச் 2026 5:00:56 PM (IST)

மத்திய கிழக்கில் உச்சகட்டப் போர்: ஈரானில் பலி எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது!
செவ்வாய் 3, மார்ச் 2026 12:31:26 PM (IST)

வாட்ஸ்அப்பில் புதிய ஸ்பாய்லர் வசதி அறிமுகம் : மெசேஜ்களை மறைத்து அனுப்பலாம்!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:19:02 AM (IST)









