» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சூடான் உள்நாட்டுப் போரில் ஒரே வாரத்தில் 6,000 பொதுமக்கள் படுகொலை: ஐ.நா. கடும் கண்டனம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:28:53 PM (IST)

சூடானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், அப்பாவி பொதுமக்கள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் தலைமையிலான 'சூடான் ஆயுதப் படை'க்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான 'விரைவு அதிரடிப் படை' (RSF) எனப்படும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்தது.
காரணம்: துணை ராணுவத்தை அதிகாரப்பூர்வ ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முரண்பாடே இந்த போருக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. டார்பூர் மாகாணத்தில் உள்ள எல்-பாஷர் நகரைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆர்.எஸ்.எப். (RSF) படைகள் நடத்திய தாக்குதல் குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள்:
அக்டோபர் மாதம் நடந்த தாக்குதலில், ஒரே வாரத்தில் மட்டும் 6,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 25 முதல் 27 வரையிலான மூன்றே நாட்களில், நகருக்குள் இருந்த 4,400 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பி ஓட முயன்ற குழந்தைகள் உட்பட 1,600 பேரை எல்லையில் வைத்து எந்திரத் துப்பாக்கிகளால் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ள புகார்கள்: ஆப்பிரிக்க பழங்குடியின பெண்களைக் குறிவைத்து ஆர்.எஸ்.எப். படையினர் திட்டமிட்ட முறையில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனைகள் சிறையான அவலம்: குழந்தைகளுக்கான மருத்துவமனையைச் சிறைச்சாலையாக மாற்றி, ஆயிரக்கணக்கானோரை அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
இந்த உள்நாட்டுப் போரின் காரணமாக இதுவரை 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1.5 கோடி மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக வெளியேறியுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: இந்திய துறைமுகம் பயன்படுத்தப்பட்டதா? மத்திய அரசு விளக்கம்!
வியாழன் 5, மார்ச் 2026 11:08:13 AM (IST)

மிக நீண்ட போருக்கு ஈரான் தயார்: மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற டிரம்ப் அழைப்பு!
புதன் 4, மார்ச் 2026 5:14:56 PM (IST)

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடித் தொடர்கிறது : டிரம்ப் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 5:19:47 PM (IST)

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: தமிழக மாணவி உட்பட 4 பேர் பலி - கொலையாளி சுட்டுக்கொலை!
செவ்வாய் 3, மார்ச் 2026 5:00:56 PM (IST)

மத்திய கிழக்கில் உச்சகட்டப் போர்: ஈரானில் பலி எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது!
செவ்வாய் 3, மார்ச் 2026 12:31:26 PM (IST)

வாட்ஸ்அப்பில் புதிய ஸ்பாய்லர் வசதி அறிமுகம் : மெசேஜ்களை மறைத்து அனுப்பலாம்!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:19:02 AM (IST)









