» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவில் எச்1பி விசா திட்டத்தில் 90 சதவீதம் போலி : அமெரிக்க பொருளாதார நிபுணர் குற்றச்சாட்டு
புதன் 26, நவம்பர் 2025 5:46:45 PM (IST)
இந்தியாவில் எச்1பி விசா திட்டத்தில் 80-90 சதவீதம் போலியானவை என அமெரிக்க பொருளாதார நிபுணர் டேவ் பிராட் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா முழுவதும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட மொத்த எச்1பி விசாக்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளன. சென்னைக்கு 220,000 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் 85,000 எச்1பி விசாக்கள் மட்டுமே உச்சவரம்பு.
அது நிர்ணயித்த வரம்பை விட 2.5 மடங்கு அதிகம். எச்1 பி விசா திட்டத்தில் பெருமளவு மோசடி நடந்துள்ளது. 71 சதவீத எச்1பி விசாக்கள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. 12 சதவீதம் பேர் மட்டுமே சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு வருகின்றனர். அங்கே ஏதோ நடக்கிறது என்பதை இது காட்டுகிறது. இந்தியாவில் எச்1பி விசா திட்டத்தில் 80-90 சதவீதம் போலியானவை. இந்தப் பிரச்னை அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது இவ்வாறு டேவ் பிராட் கூறினார்.
ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு மட்டுமே, அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும், 65 ஆயிரம் எச் 1 பி விசாக்களை வழங்கி வருகிறது. அத்துடன், அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கும், இந்த வகை விசாக்கள், 20,000 வழங்கப்படும். இரண்டையும் சேர்த்தால், ஒவ்வொரு ஆண்டும் மொத்தம், 85,000 விசாக்கள் வழங்கப்படுகின்றன.
இந்த விசா பெற்றவர்கள், அமெரிக்காவில் மூன்றாண்டுகள் தங்கியிருந்து பணியாற்றலாம். தேவையெனில், மேலும் மூன்றாண்டுகளுக்கு விசா காலத்தை நீட்டிக்க முடியும். தற்போதைய நிலவரப்படி, எச்1பி விசா பெற்ற, 13 லட்சம் வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் : பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:39:34 PM (IST)

கொலை வழக்கில் இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 12:48:43 PM (IST)

ஆப்கானிஸ்தானில் கொடூர குற்றவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சிறுவன்..!
புதன் 3, டிசம்பர் 2025 5:15:22 PM (IST)

பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்: ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!
புதன் 3, டிசம்பர் 2025 12:28:09 PM (IST)

நோபல் பரிசு பெற்ற இந்தியரின் நினைவாக மகனுக்கு சேகர் என்று பெயர் சூட்டிய எலான் மஸ்க்
புதன் 3, டிசம்பர் 2025 8:25:48 AM (IST)

இந்தியாவின் வளர்ச்சிக்கு, நாங்கள் தோளோடு தோளாக... ரஷ்ய அதிபர் மாளிகை..!!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:42:52 PM (IST)









