» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு

புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)



அமீரக லாட்டரி குலுக்கலில் அனில்குமார் பொல்லா என்ற இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு விழுந்துள்ளது. 

அபுதாபியில் வசித்து வரும் இந்தியர் அனில்குமார் பொல்லா (29). இவர் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்பு அதாவது கடந்த 18-ந் தேதி அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் பங்கேற்றார். இதில் அவர் பதிவிட்ட அனைத்து எண்களும் தேர்வு செய்யப்பட்டு 10 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.250 கோடி) பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

அமீரகத்தில் இதுவரை இத்தனை பெரிய தொகை யாரும் லாட்டரியில் பரிசாக வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனில்குமார் பொல்லாவின் வீடியோக்கள் சமூக ஊடகத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தான் முதலில் சொகுசு சூப்பர் கார் ஒன்றை வாங்கி பிறகு எழு நட்சத்திர ஓட்டலில் ஒரு மாதம் தங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்த பணத்தை எவ்வாறு புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது என்பதை கவனமாக திட்டமிட நான் நேரம் எடுத்துக்கொள்வேன் என கூறியுள்ளார். அதிர்ஷ்ட குலுக்கலில் வெற்றி பெற்ற அனில்குமார் பொல்லாவுக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory