» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாலஸ்தீனத்துக்கு மேலும் 3 நாடுகள் அங்கீகாரம்
திங்கள் 22, செப்டம்பர் 2025 8:27:58 AM (IST)
ஐ.நா. பொதுச்சபை கூட்டம் இந்த வாரம் நடக்கும் நிலையில், சுதந்திர பாலஸ்தீன நாட்டை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளும் அங்கீகரித்துள்ளன.
இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினர் இடையே 2 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 65 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். 90 சதவீதத்துக்கு மேற்பட்டோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து விட்டனர். அங்கு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
சண்டை நீடிப்பதால், கவலை அடைந்துள்ள உலக நாடுகள், சுதந்திர பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக அறிவிக்கத் தொடங்கின. முதலில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்தார். இதுவரை ஒரு டஜனுக்கு மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் உள்பட 145-க்கு மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
ஆனால் அப்படி அறிவிப்பது, ஹமாஸ் இயக்கத்தினரை வலுப்படுத்துவதாக அமைந்து விடும் என்று இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, ஐ.நா. பொதுச்சபை கூட்டம் இந்த வாரம் நடக்கிறது. அதில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் நேற்று பாலஸ்தீனத்தை அங்கீகரித்தன. கனடாவும் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்துள்ளது. அதன் பிரதமர் மார்க் கர்னி, இதை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த முடிவு, இஸ்ரேலும், பாலஸ்தீனமும் அருகருகே வாழும் இரு நாடுகள் தீர்வுக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மார்க் கர்னி ஏற்கனவே தனது கருத்தை ஜூலை மாதமும் தெரிவித்து இருந்தார். அவரது நிலைப்பாட்டால், கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவது கடினமாகி விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். அதையும் மீறி, மார்க் கர்னி தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் : பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:39:34 PM (IST)

கொலை வழக்கில் இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 12:48:43 PM (IST)

ஆப்கானிஸ்தானில் கொடூர குற்றவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சிறுவன்..!
புதன் 3, டிசம்பர் 2025 5:15:22 PM (IST)

பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்: ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!
புதன் 3, டிசம்பர் 2025 12:28:09 PM (IST)

நோபல் பரிசு பெற்ற இந்தியரின் நினைவாக மகனுக்கு சேகர் என்று பெயர் சூட்டிய எலான் மஸ்க்
புதன் 3, டிசம்பர் 2025 8:25:48 AM (IST)

இந்தியாவின் வளர்ச்சிக்கு, நாங்கள் தோளோடு தோளாக... ரஷ்ய அதிபர் மாளிகை..!!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:42:52 PM (IST)









