» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:22:04 PM (IST)
காவிரி நீர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திற்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய 177.25 டி.எம்.சி தண்ணீரை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை மட்டுமே திறந்துவிடும் கர்நாடகா, ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் புறக்கணித்து வந்தது.
இந்த ஆண்டும் கர்நாடகா தண்ணீர் திறக்க அடம்பிடித்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த நல்ல மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தமிழகத்தின் உரியப் பங்கை வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள் மீதான விசாரணை நாளை மறுநாள் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ளது.
நீதிமன்ற விசாரணையின் போது கண்டனத்திற்கு உள்ளாவதைத் தவிர்க்கவே, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையிலான கர்நாடக நீர்வளத்துறை அவசர அவசரமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாழும் கலை அமைப்புக்கு விதித்த ரூ. 5 கோடி அபராதம் ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:43:01 PM (IST)

ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூல்? - எஸ்பிஐ நிர்வாகம் விளக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:00:19 PM (IST)

காவல் நிலையத்தில் ராகுல், பிரியங்கா தர்ணா: டெல்லியில் பெரும் பரபரப்பு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:36:39 PM (IST)

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசே இடத்தை தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர்
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:56:07 PM (IST)

கிணற்றில் கார் பாய்ந்து தம்பதி, 2 குழந்தைகள் உயிரிழப்பு: தெலுங்கானாவில் சோகம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:22:33 PM (IST)

கேஒய்சி புதுப்பித்தல் பெயரில் அதிகரிக்கும் சைபர் மோசடி: வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:58:31 PM (IST)








