» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமெரிக்கா - ஈரான் மோதலால் உலகச் சந்தையில் பதற்றம்: இந்தியப் பங்குச்சந்தையில் வீழ்ச்சி!

புதன் 8, ஜூலை 2026 4:53:47 PM (IST)

SensexNifty.jpg

ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து, இந்தியப் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. 

ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து, கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததால் இந்தியப் பங்குச்சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதன்கிழமையன்று 2 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்தன. 

உலகளாவிய சந்தைகளின் எதிர்மறைப் போக்கு மற்றும் நிறுவனங்களின் முதல் காலாண்டு முடிவுகள் குறித்த முதலீட்டாளர்களின் கவலைகளும் இந்த வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.

மும்பை பங்குச்சந்தையின் 30 பங்குகள் உள்ளடக்கிய சென்செக்ஸ் (BSE Sensex) ஒரே நாளில் 1,677.12 புள்ளிகள் (2.15 சதவீதம்) சரிந்து 76,503.60 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் அதிகபட்சமாக 1,921.69 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளுள் மொத்தம் 3,211 பங்குகள் வீழ்ச்சியடைந்தன; 1,070 பங்குகள் மட்டுமே உயர்வைச் சந்தித்தன, 173 பங்குகள் எவ்வித மாற்றமுமின்றி நிலைபெற்றன.

அதேபோல, தேசிய பங்குச்சந்தையின் 50 பங்குகள் உள்ளடக்கிய நிஃப்டி (NSE Nifty) 516.65 புள்ளிகள் (2.12 சதவீதம்) சரிந்து 23,882.05 புள்ளிகளில் முடிவடைந்தது.

நிபுணர் கருத்து மற்றும் உலகளாவிய சூழல்:

இதுகுறித்து ஆன்லைன் வர்த்தகம் மற்றும் நிதித் தொழில்நுட்ப நிறுவனமான என்ரிச் மணி (Enrich Money) முதன்மையதிகாரி (CEO) பொன்முடி ஆர் கூறும்போது, "ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானுடனான தற்காலிக அமைதி ஒப்பந்தம் நிறைவுற்றதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். 

இந்த புவிசார் அரசியல் பதற்றம் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் புதிய கவலைகளை ஏற்படுத்தியதால், இந்தியப் பங்குச்சந்தைகளில் கடுமையான விற்பனை அழுத்தம் (Sell-off) ஏற்பட்டது” என்று குறிப்பிட்டார். இந்த திடீர் மோதல் போக்கால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கிட்டத்தட்ட 7 சதவீதம் உயர்ந்து, உலக நிதிச் சந்தைகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் நஷ்டத்தைச் சந்தித்தன. குறிப்பாக இண்டர்குளோப் ஏவியேஷன் (இண்டிகோ), மாருதி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பெரும் வீழ்ச்சியடைந்தன. நடுத்தர நிறுவனங்களின் குறியீடான பிஎஸ்இ மிட்கேப் (BSE MidCap) 2.14 சதவீதமும், சிறு நிறுவனங்களின் குறியீடான ஸ்மால்கேப் (SmallCap) 1.61 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.


மக்கள் கருத்து

தெரிந்தவன்Jul 9, 2026 - 09:09:15 AM | Posted IP 162.1*****

பங்குச்சந்தை எல்லாம் பிராடுசந்த்தை

சந்திரன்Jul 8, 2026 - 07:42:56 PM | Posted IP 104.2*****

இவன் கிறுக்கன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory