» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வாக்கு எண்ணிக்கை எதிரொலி: கொல்கத்தாவில் நாளை முதல் 60 நாட்களுக்கு 144 தடை அமல்!
சனி 2, மே 2026 4:02:16 PM (IST)
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கொல்கத்தாவில் நாளை (மே 3) முதல் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தலின் போது சில இடங்களில் முறைகேடு புகார்கள் எழுந்தன. குறிப்பாக, வாக்கு இயந்திரங்களில் பாஜக சின்னம் மறைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனையொட்டி, மகர்ஹாத் பாஸ்சிம் மற்றும் டைமண்ட் ஹார்பர் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.
மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அன்று மிகப்பெரிய அளவில் வன்முறை அல்லது போராட்டங்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா காவல் ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவில்:
- நாளை (மே 3) முதல் ஜூலை 1-ம் தேதி வரை 60 நாட்களுக்கு 144 தடை அமலில் இருக்கும்.
- ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாகக் கூடுவதற்கும், ஊர்வலங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும், பொது அமைதியைப் பாதுகாக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிலிண்டர் விலை விலை உயர்வுக்கு கண்டனம் : கேரளாவில் மே 6-ம் தேதி ஓட்டல்கள் மூடல்!
சனி 2, மே 2026 4:55:39 PM (IST)

புனேயில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 65 வயது முதியவர் கைது!
சனி 2, மே 2026 3:36:16 PM (IST)

செல்போனில் எச்சரிக்கை ஒலி கேட்டால் அச்சப்பட வேண்டாம் - மத்திய அரசு அறிவுறுத்தல்!
சனி 2, மே 2026 12:26:10 PM (IST)

ஐதராபாத் அருகே கோர விபத்து: லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
சனி 2, மே 2026 11:02:35 AM (IST)

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் கருவைக் கலைக்க காலக்கெடு தேவையில்லை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:46:58 PM (IST)

ஆதார் சிஸ்டத்தில் ஊடுருவல்: ஏஐ பயன்படுத்தி தொழிலதிபரை ஏமாற்றிய கும்பல் சிக்கியது!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:42:55 PM (IST)









