» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஈரானுடனான நட்புறவால் இந்தியக் கப்பல்களுக்குப் அனுமதி - ஜெய்சங்கர் விளக்கம்!
திங்கள் 16, மார்ச் 2026 5:11:19 PM (IST)
சர்வதேச அளவில் பதற்றம் நிலவி வரும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக, இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடக்க ஈரானுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை கைகொடுத்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் ‘ஃபினான்சியல் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இது குறித்துக் கூறியுள்ள முக்கியத் தகவல்கள்: "ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்களை அனுமதித்ததற்காக ஈரான் நம்மிடமிருந்து பிரதிபலனாக எதையும் பெறவில்லை. இது ஒரு பண்டமாற்று (Quid pro quo) விவகாரம் அல்ல. இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்ட கால வரலாற்று ரீதியான உறவு உள்ளது. அந்த நட்பின் அடிப்படையிலேயே இந்த அனுமதி கிடைத்துள்ளது," என்று ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. "தொடர்பைத் துண்டித்துக் கொள்வதை விட, மற்ற நாடுகளுடன் பேசுவதும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் இந்தியாவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. இதுவே ஒரு நிரந்தரத் தீர்வைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும். தற்போது ஒவ்வொரு கப்பலும் தனித்தனியாகப் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றன," என அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு நாட்டின் உறவும் அதன் தனித்துவமான தகுதிகளின் அடிப்படையில் அமைபவை என்பதால், இந்தியாவின் அணுகுமுறையை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுவது கடினம். இருப்பினும், இந்தியாவின் இந்த ராஜதந்திர அணுகுமுறையை ஐரோப்பிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக, 'சிவாலிக்' மற்றும் 'நந்தா தேவி' ஆகிய இரண்டு இந்தியக் கப்பல்கள் 92,712 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய வாயுவை (LPG) ஏற்றிக்கொண்டு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பாக முந்த்ரா மற்றும் காண்ட்லா துறைமுகங்களுக்கு வந்தடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களவை மாண்பைக் காப்பதில் ஓம் பிர்லா உறுதி: சபாநாயகருக்குப் பிரதமர் மோடி பாராட்டு!
திங்கள் 16, மார்ச் 2026 5:43:33 PM (IST)

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு - ரூ.25 லட்சம் நிவாரண நிதி!
திங்கள் 16, மார்ச் 2026 5:38:50 PM (IST)

தட்டுப்பாட்டைப் போக்க இந்தியாவிற்கு வருகிறது 93,000 டன் எரிவாயு: மத்திய அரசு நடவடிக்கை!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:20:20 AM (IST)

குதிரை பேர அச்சம்: 8 எம்எல்ஏ-க்களை கர்நாடகாவுக்கு மாற்றியது ஒடிசா காங்கிரஸ்!
சனி 14, மார்ச் 2026 12:50:01 PM (IST)

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்: மாநிலங்களவையில் குரல் எழுப்பிய அ.தி.மு.க.!
சனி 14, மார்ச் 2026 8:51:29 AM (IST)

மாதவிடாய் கால ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 13, மார்ச் 2026 5:00:23 PM (IST)








