» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிலத் தகராறில் இருவர் கொலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை!

செவ்வாய் 24, பிப்ரவரி 2026 11:55:13 AM (IST)

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலத் தகராறு காரணமாக இரண்டு சகோதரர்களைக் கொலை செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சஹாரன்பூர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி, சுமார் 20 பீகா (ஏறத்தாழ 12.5 ஏக்கர் முதல் 20 ஏக்கர் வரை) நிலம் தொடர்பான தகராறில் யாசின் மற்றும் அவரது சகோதரர் தாசின் ஆகியோர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு, கொலையில் தொடர்புடைய 13 பேரைக் கைது செய்தது. விசாரணையின் முடிவில், போதுமான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சஹாரன்பூர் உள்ளூர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

சிறைத்தண்டனையுடன் சேர்த்து, குற்றவாளிகள் 13 பேருக்கும் மொத்தமாக ரூ.10.73 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory