» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)
திருவனந்தபுரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், கேரள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி நன்றி தெரிவித்து, "கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்களுக்கு எனது நன்றி.கேரளத்தில் யுடிஎஃப் மற்றும் எல்டிஎஃப் ஆகியவற்றால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஆகையால், நல்லாட்சியை வழங்கவும், அனைவருக்கும் வாய்ப்புகளைக் கொண்ட கேரளத்தை உருவாக்கவும் ஒரே வழி தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே என்று மக்கள் தீர்மானித்தனர்.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை தருணம். மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். திருவனந்தபுரத்தின் வளர்ச்சியை நோக்கி எங்கள் கட்சி பாடுபட்டு, மக்களின் வாழ்க்கையை எளிதாக்க ஊக்குவிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இருப்பினும், தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜகவே வெற்றி பெற்றது. திருவனந்தபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 45 ஆண்டுகால வெற்றி வரலாற்றை முறியடித்து, முதன்முறையாக பாஜக வெற்றி பெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இன்று வானில் அரிய நிகழ்வு: ரத்த நிலவை வெறும் கண்களால் பார்க்கலாமா?
செவ்வாய் 3, மார்ச் 2026 12:47:38 PM (IST)

பெண் குழந்தைகளுக்கான லட்சாதிபதி மகள் திட்டம் அறிமுகம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:13:16 AM (IST)

மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப வேண்டும்: நெதன்யாகுவுடன் மோடி அவசர ஆலோசனை
திங்கள் 2, மார்ச் 2026 5:55:10 PM (IST)

நாக்பூர் வெடிபொருள் தொழிற்சாலையில் கோர விபத்து; 17 பேர் உடல் சிதறி பலி!
திங்கள் 2, மார்ச் 2026 11:34:33 AM (IST)

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!
ஞாயிறு 1, மார்ச் 2026 11:55:03 AM (IST)

பேய் ஓட்டுவதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கோவில் பூசாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
ஞாயிறு 1, மார்ச் 2026 11:09:07 AM (IST)










