» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பனிமூட்டத்தால் விமானம் ரத்தானால் கட்டணம் திருப்பி செலுத்தப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு

வெள்ளி 12, டிசம்பர் 2025 4:36:29 PM (IST)

பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டால் பயணிகளுக்கு அவர்களின் டிக்கெட் கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. 

அதே சமயம், பயணிகள் மாற்று விமானங்களில் பயணிக்க விரும்பினால், விமான டிக்கெட்டுகள் மாற்றி கொடுக்கப்படும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை 2026 பிப்ரவரி 10-ந்தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பனிமூட்டம் காரணமாக ரத்தாகும் விமானங்கள் குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory