» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஹோலி பண்டிகை பேரணி: 10 மசூதிகளை திரையிட்டு மூட உத்தர பிரதேச அரசு உத்தரவு!

வியாழன் 13, மார்ச் 2025 12:48:47 PM (IST)



உத்தர பிரதேசத்தில் ஹோலி பண்டிகை பேரணியின்போது 10 மசூதிகளை திரையிட்டு மூட  அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

வட இந்தியாவில் ஹோலி பண்டிகை வரும் 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் இஸ்லாமியர்கள் ஜும்ஆ தொழுகையை மேற்கொள்வார்கள். சுமார் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹோலி பண்டிகையும், ஜும்ஆ தொழுகை தினமும் ஒரே நாளில் வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உத்தர பிரதேச் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 'சவுபாய்' என்ற பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணிக்கான பாதையில் சுமார் 10 பள்ளிவாசல்கள் உள்ளன. அந்த 10 பள்ளிவாசல்களையும் திரையிட்டு மூடுவதற்கு உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சம்பல் காவல்துறை எஸ்.பி. சிரீஷ் சந்திரா கூறுகையில், "சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கும், இரு சமூகத்தினரும் தங்கள் பண்டிகைகளை முழு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடுவதற்கு வசதியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார். அதோடு, இந்த நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory