» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
செவ்வாய் 14, மே 2024 5:44:46 PM (IST)
தென்மேற்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குகிறது. அடுத்த வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. வருகிற 19-ந்தேதி தெற்கு அந்தமான் கடல், வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோ பார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
அதனை தொடர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சரியான நேரத்தில் பருவமழை தொடங்கும். ஜூன் 1-ந்தேதி கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி விடும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.தென்மேற்கு பருவமழையின்போது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 5:33:56 PM (IST)

உங்களை இந்தியாவில் சந்திக்க காத்திருக்கிறேன்: சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி கடிதம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 4:25:39 PM (IST)

கர்நாடகாவில் ரூ.275 கோடி போதை பொருள் சிக்கியது: 2 வெளிநாட்டு பெண்கள் கைது
திங்கள் 17, மார்ச் 2025 9:20:25 PM (IST)

டெல்லி பிரதமர் மோடி - நியூசிலாந்து பிரதமர் சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
திங்கள் 17, மார்ச் 2025 5:34:02 PM (IST)

போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டு சிறை: புதிய குடியேற்ற மசோதாவில் தகவல்!
திங்கள் 17, மார்ச் 2025 12:21:45 PM (IST)

பாகிஸ்தானுடனான அமைதி முயற்சிக்கு துரோகமே பதிலாக கிடைத்தது: பிரதமர் மோடி
திங்கள் 17, மார்ச் 2025 12:14:58 PM (IST)
