» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஏரியில் டிராக்டர் கவிழ்ந்து 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி: உ.பி.,யில் சோகம்!

சனி 24, பிப்ரவரி 2024 5:05:29 PM (IST)

உத்தரப்பிரதேசத்தில் ஏரியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில், 7 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் டிராக்டர் ஒன்று ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மகா பூர்ணிமாவை முன்னிட்டு கங்கைக்கு புனித நீராட டிராக்டரில் சென்றுக் கொண்டிருந்த போது, விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்து உள்ளனர். உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, ‛‛மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உத்தரவிட்டுள்ளேன்'' என எக்ஸ் சமூகவலைதளத்தில் யோகி ஆதித்யநாத் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory