» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழா: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
வியாழன் 25, மே 2023 3:29:50 PM (IST)
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரே திறந்து வைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் புதிய நாடளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 28 ஆம் தேதி திறந்துவைக்கிறார். இந்நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த விழாவைப் புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
இது குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு பெரும் அவமதிப்பு என்பதுடன் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன. இதனால் நாடளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரே திறந்துவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யபட்டுள்ளது.புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரே திறந்து வைக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் உச்சநீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன்: பிரஜ் பூஷண்
புதன் 31, மே 2023 3:56:37 PM (IST)

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி.. டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்..!
புதன் 31, மே 2023 10:48:39 AM (IST)

மல்யுத்த வீராங்கனைகளின் பதக்கங்களை கங்கையில் வீசும் திட்டம் நிறுத்திவைப்பு
புதன் 31, மே 2023 10:24:44 AM (IST)

இந்திய பணத்தின் நேர்மையில் சந்தேகம் : ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
செவ்வாய் 30, மே 2023 5:15:03 PM (IST)

மணிஷ் சிசோடியா ஜாமின் மனு தள்ளுபடி : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 30, மே 2023 12:48:55 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி; 30 பேர் காயம்!
செவ்வாய் 30, மே 2023 11:23:36 AM (IST)
