» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மும்பையில் 7 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து
சனி 4, செப்டம்பர் 2021 4:23:23 PM (IST)
மும்பையில் 7 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
மராட்டிய மாநிலம் மும்பை போரிவாலியில் 7 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 7 மாடி கட்டிடத்தில் பிடித்த தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தீயணைப்பு அதிகாரி ஒருவர் இதில் படுகாயம் அடைந்தார்.
அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் பொதுமக்கள் யாரும் காயம் அடையவில்லை என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து போரிவால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.