» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவில் ஒரே நாளில் 88.13 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை: சுகாதாரத்துறை தகவல்
செவ்வாய் 17, ஆகஸ்ட் 2021 12:40:12 PM (IST)
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 88.13 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள பட்டியலின்படி , நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு நாள் அதிகபட்சமாக 88.13 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 55,47,30,609 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள் (மொத்தம் 55,47,30,609)
18 - 44 வயது: முதல் தவணை - 20,20,24,963; 2ஆம் தவணை - 1,61,02,484
45 - 59 வயது: முதல் தவணை - 11,87,86,699; 2ஆம் தவணை - 4,64,06,915
60 வயதுக்கு மேல்: முதல் தவணை - 8,17,46,204; 2ஆம் தவணை - 4,06,60,707
சுகாதாரத்துறை முதல் தவணை - 1,03,50,941; 2ஆம் தவணை - 81,20,754
முன்களப் பணியாளர்கள் முதல் தவணை - 1,82,86,002; 2ஆம் தவணை - 1,22,44,940