தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1,190 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்டுவெல் காலனி பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சட்டவிரோதமாக மதுபானங்களை வைத்து விற்பனை செய்த, தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் ஜான் பாண்டியன் (58) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜான் பாண்டியனிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,190 மதுபாட்டில்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து, மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

