தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை இன்று கோலகாலமாக கொண்டாடப்பட்டது.
விழாவில் கல்லூரி முதல்வர் வீரபாகு சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஓணம் பண்டிகையின் சிறப்புகள் பற்றி உரையாற்றினார். மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மகளிர் ஆலோசனை குழும பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

