பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தூத்துக்குடியில் இருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூருக்குச் சென்னை எழும்பூர் வழியாகச் சிறப்பு ரயில்கள் செப்டம்பரில் இயக்கப்படவுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மொத்தம் 18 பெட்டிகளைக் கொண்ட இந்தச் சிறப்பு ரயில் தமிழகத்தில் மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்:

