மத்திய அரசின் தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவைக் கண்டித்து, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன பேரணி இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப. மாணிக்கம் தாகூர் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் எஸ். எம். சகாயராஜ் தலைமையில் பேரணி நடைபெற்றது.மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இப்போராட்டத்தில் மண்டலத் தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், மேற்கு மண்டலப் பொறுப்பாளர் ஜான் சாமுவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் மாவட்டத் துணைத் தலைவர்கள் மடத்தூர் தனபால் ராஜ், பாலகிருஷ்ணன், அந்தோணி ஜெயராஜ், டேவிட் வசந்தகுமார், பி.ஜே.சி. சுரேஷ், நாகேந்திரன், ராஜாராம், மாவட்டப் பொதுச்செயலாளர்கள் கோபால், மைக்கேல் பிரபாகர், புல்டன் ஜெயின், ரஞ்சிதம் ஜெபராஜ், ஆண்ட்ரூ ஜாப்ரின் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இக்னேசியஸ், காமாட்சி தனபாலன், கதிர்வேல் மாரியப்பன், ஜோனாதன், அசன் பாத், வழக்கறிஞர் சகாயராஜ் உட்படத் திரளான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

