சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026' நிகழ்ச்சியை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஆக. 13) தொடக்கிவைத்தார்.
ரூ. 67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இதன் மூலம் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் இம்மாநாடு முக்கிய மைல்கல்லாக அமையும்" எனத் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

