திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் அக்டோபர் 20 முதல் அதிநவீன LHB பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து வரும் அக்டோபர் 20 முதல் LHB பெட்டிகளுடன் இயங்கும். திருச்செந்தூரில் இருந்து வரும் அக்டோபர் 21 முதல் LHB பெட்டிகளுடன் இயங்கும்.

LHB (Linke-Hofmann-Busch) என்பது ஜெர்மன் தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ரயில் பெட்டியாகும். பழைய ஐ.சி.எஃப் (ICF) பெட்டிகளுடன் ஒப்பிடுகையில் இவை பல்வேறு மேம்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளன. விபத்து நேரங்களில் பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று ஏறாத சிறப்பு வடிவமைப்பு.

அதிக வேகத்தில் செல்லும்போது ரயில் பெட்டியின் நிலைத்தன்மை (Stability) சிறப்பாக இருக்கும். பயணத்தின் போது சத்தம் மற்றும் அதிர்வுகள் மிகக் குறைவாக இருக்கும் என்பதால் பயணிகள் சொகுசான பயண அனுபவத்தைப் பெற முடியும். செந்தூர் எக்ஸ்பிரஸ் LHB பெட்டிகளாக மாற்றப்படுவது தென் மாவட்ட மற்றும் ஆன்மீகப் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.