இடதுசாரி கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அரசு கடிதத்தின் அடிப்படையில்: இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் ஜனதா கட்சி ஆகியவை நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, மாணவர்களின் பங்கேற்பைத் தடுக்க உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரத்தை உடனடியாக ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.