ஓணம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தோவாளை பூச்சந்தையில் பூக்களின் தேவை அதிகரித்து அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தோவாளை பூச்சந்தைக்குக் குமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து பெருமளவில் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன. ஓணம் பூக்கோலங்களுக்காகக் குமரி மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் திரளாக வந்து பூக்களைப் போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.
தேவை அதிகரிப்பு காரணமாக தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பிச்சிப் பூ கிலோ ரூ. 750-லிருந்து ரூ. 500 உயர்ந்து, தற்சமயம் ரூ. 1,250-க்கு விற்பனையாகிறது. முல்லைப் பூ கிலோ ரூ. 700-லிருந்து ரூ. 450 உயர்ந்து, ரூ. 1,150-க்கு விற்பனையாகிறது. மல்லிகைப் பூ கிலோ ரூ. 700-லிருந்து ரூ. 200 உயர்ந்து, ரூ. 900-க்கு விற்பனையாகிறது.

