தமிழக முதல்வர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி நடப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

கோவில்பட்டியில் நடைபெற்ற மதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் என்பவரது மகனின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது: "ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நன்னோக்கோடு முதல்வர் விஜய் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். ஆனால், அரசுத்துறைகளில் கோடிக்கணக்கில் ஊழல் செய்த சில அதிகாரிகள், தவெக ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

அவர்கள் முக்கியமான கோப்புகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தாமல் முடக்கி வைக்கின்றனர். இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும் அதிகாரிகளைப் உடனடியாகப் பணியிலிருந்து விடுவித்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக நேர்மையான அதிகாரிகளைப் பணியில் நியமிக்க வேண்டும்" என்றார்.