திருநெல்வேலி மாவட்டத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை (ஆக.26) டாஸ்மாக் மதுபானக்கடைகள், பார்களை மூட மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மிலாடி நபியை முன்னிட்டு 26.08.2026 (புதன்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் (FL1 உரிமங்கள்) அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA & FL11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 26.08.2026 (புதன்கிழமை) மிலாடி நபியை முன்னிட்டு மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.

