ஆழ்வார்திருநகரி காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்து.
ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு ஆழ்வார்திருநகரி நவலெட்சுமிபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (33) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான அதே பகுதியைச் சேர்ந்த மரியசிலுவை என்பரவது மகன்களான அருள்ராஜ் (31/26), ஞானசேகர் (29/26), மற்றும் சந்தியப்பன் மகன் அந்தோணி ராஜ் (30/26), குணசிங் (26/26) அந்தோணி முத்து மகன் சந்தியப்பன் (50) ஆகிய 5 பேரையும் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு ADJ - II நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் மேற்படி நீதிமன்றத்தின் நீதிபதி ப்ரீத்தா எதிரிகளான அருள்ராஜ், அந்தோணிராஜ், ஞானசேகர், குணசிங் மற்றும் சந்தியப்பன் ஆகிய 5 பேர்களையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

